உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும்

Published On 2023-10-14 08:06 GMT   |   Update On 2023-10-14 08:06 GMT
  • 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும்.
  • மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

விருதுநகர்

விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராம னுக்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணி களை ஆய்வு செய்ததோடு பணியாளர்களுடன் கலந்து ரையாடி அவர்களது குறைக ளையும் கேட்ட றிந்தேன். பல்வேறு பகுதி களில் 100 நாட்க ளுக்கு குறைவாகவே வேலை அளிப்பதாகவும் கடந்த ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் 9 வாரங்களாக ஊதிய பட்டு வாடா வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக் கமே கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்பாட்டு அடைய வேண்டும் என்பதற்காக தான்.

இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.83 ஆயிரம் கோடி நிதி தேவைப் படும் நிலையில் தற்போது ரூ.69 ஆயி ரம்கோடி நிதி மட்டுமே ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நிதி ஆண் டில் ரூ. 17 ஆயிரம் கோடி நிலுவை உள்ள நிலையில் திட்ட பயனாளிகளுக்கு முழுமையாக ஊதிய பட்டுவாடா செய்ய முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இதனால் அவர்கள் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணி யாளர்களுக்கு கடந்த 9 வாரங்களாக நிலுவையில் உள்ள ஊதி யத்தை உடனடி யாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

திட்டத்தின் கீழ் தாமதம் இல்லாமல் ஊதிய பட்டு வாடா செய்ய வேண்டியது சட்டபூர்வ கடமை மட்டுமல் லாது பயனாளிகளின் வாழ் வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய தார்மீக கடமையு மாகும்.

எனவே பயனாளிகளுக்கு ஊதிய பட்டுவாடா செய்வ தற்கான நடவடிக்கையை துரி தப்படுத்த வேண்டு கிறேன். இந்த பிரச்சினையில் தங்கள் உடனடி கவனம் செலுத்துவது இந்த ஏழை குடும்பங்களில் நிதிச் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல் பண் டிகை காலத்தில் அவர்களுக்கு நிவாரணமாக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News