மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை
- கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த சாஸ்திரி நகர் அருகே உள்ள பகவதி நகரைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 29), கார்பெண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, லோகேஷை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் மாமியார் வீட்டுக்குச் சென்று லோகேஷ், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். லோகேஷ் வீட்டிற்கு வர அவரது மனைவி மறுத்துவிட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று இரவு வீட்டில் இருந்த லோகேஷ் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.