உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு முகாம்

Published On 2023-10-26 09:07 GMT   |   Update On 2023-10-26 09:07 GMT
  • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
  • மாவட்ட வருவாய் அலுவலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் 2 மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மாற்றுத்திற னாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

விபத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளிகள் 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4 லட்சமும், .இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிக ளுக்கான ஈமச்சடங்கு தொகை ரூ.17 ஆயிரம் வீதம் 8 நபர்களுக்கு ரூ.1.36 லட்சம் என மொத்தம் ரூ.5.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Tags:    

Similar News