உள்ளூர் செய்திகள்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா பொதுமக்களிடம் கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு

Published On 2022-07-07 11:01 GMT   |   Update On 2022-07-07 11:01 GMT
  • முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
  • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல தலைவர் வீனஸ் நரேந்திரன், கவுன்சிலர் சதீஷ்குமார்பாச்சி, சுகாதார அலுவலர்கள் லூர்துசாமி, சிவக்குமார், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. மேலும் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும், கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் கொண்ட துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து கை கழுவுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கை கழுவுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News