உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

Published On 2023-06-30 15:48 IST   |   Update On 2023-06-30 15:48:00 IST
  • கடன் தொல்லையால் இறந்தாரா?
  • போலீசார் விசாரணை

வேலூர்:

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ஏகாம்பரநல்லூரை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் ஹரிஹரன் (வயது 27). இவர் சிப்காட்டில் உள்ள தனியா தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த ஹரிஹரன் முகுந்தராயபுரம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் ஹரிகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்று காட்பாடி ெரயில்வே போலீசார் ஹரிகரன் உடலை மீட்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரன் கடன் தொல்லை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரெயில் மோதி இறந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News