உள்ளூர் செய்திகள்

சாலைஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களால் பஸ் ஊர்ந்து செல்வதை படத்தில் காணலாம்.

குமாரபாளையத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள்

Published On 2022-10-26 07:11 GMT   |   Update On 2022-10-26 07:11 GMT
  • குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இந்த சாலைகளின் ஓரங்களில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
  • இதனால் போக்குவரத்து மேலும் இடையூறு ஏற்படு–கிறது.

குமாரபாளையம்:

குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும்.

இந்த சாலைகளின் ஓரங்களில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. சாலையின் நடுவில் டிவைடர் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே சாலை குறுகியதாக உள்ளது. அதில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றால் டூவீலர்கள் கூட போக முடியாது.

இந்த நிலையில் சாலையோரங்களில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களும், கடைக–ளுக்கு சரக்கு கொண்டு வரும் டெம்போ, லாரி, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனால் போக்குவரத்து மேலும் இடையூறு ஏற்படு–கிறது. சரக்கு வாக–னங்கள் நகர் எல்லைக்குள் வந்து செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும்.

இதுபோல் போக்கு–வரத்திற்கு இடையூறு ஏற்ப–டுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமை–யாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News