கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வரலட்சுமி விரத விழா
- புற்றுக்கோவிலில் வரலட்சுமி விரத விழா சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
- கொலு மண்டப்பத்தில் வரலட்சுமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதணை நடைப்பெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வரலட்சுமி விரத விழா சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
இதனையொட்டி அதிகாலை நடை திறக்கப் பட்டு விநாயகர் முருகன் சுவாமி அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைப்பெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கொலு மண்டப்பத்தில் வரலட்சுமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை பிரசாத தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதணை நடைப்பெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார்.
இவ்விழாவில் கோயில் தலைவர் ராஜபாண்டி பொருளாளர் சுப்பிரமணி நிர்வாக கமிட்டி உறுப்பி னர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.