உள்ளூர் செய்திகள்

திருச்சியில் ரூ. 36 லட்சம் சீட்டு பணம் மோசடி

Published On 2023-09-23 13:25 IST   |   Update On 2023-09-23 13:25:00 IST
  • மற்றொரு சம்பவத்தில் ரூ.5 லட்சத்தை இழந்த பெண்
  • மோசடி செய்த ஜீவராஜ் ,சுகந்தி, செந்தில்குமார், பிரபா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சி, 

திருச்சி காந்திநகர் எம்.ஜி.ஆர்.தெருவை சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 47 ). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 35 பேரும், திருச்சி காந்திநகர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் பேகம், நிலோபர், திருச்சி உடை யான் பட்டி மெயின் ரோடு ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த பாபர் அலி ஆகியோ ரின் சீட்டு நிறுவனத்தில் சீட்டு பணம் கட்டி வந்தனர்.

அந்த வகையில் அவர்க ளுக்கு ரூ. 36 லட்சம் முதல் தொகை கொடுக்க வேண்டி வந்தது. ஆனால் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த நிலையில் பாபர் அலி தனது வீட்டை காலி செய்யும் தகவல் கிடைத்தது உடனே பாதிக்கப்பட்ட மக்கள் விஜயலட்சுமி தலைமையில் சென்று அவரிடம் சீட்டு பணத்தை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுங்கள் என கேட்டு தகராறு செய்த னர்.

இருந்தபோதிலும் சீட்டு பணத்தை சம்பந்தப்பட்டவ ர்கள் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து பாதிக்க ப்பட்ட விஜயலட்சுமி மாந கர குற்றப்பிரிவு போலீ சில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பட்டதாரி பெண்ணிடம் மோசடி

திருச்சி கே.கே.நகர் ரங்கா நகர் 3-வது கிராஸ் பகுதி யைச் சேர்ந்தவர் மணிக ண்டன். இவர் வெளிநாட்டில் (சிங்கப்பூர்) வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிதா (வயது 38). இளங் கலை பட்டதாரி.

இவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி அப்பகுதி யை சேர்ந்த ஜீவராஜ் என்ப வர் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் வேலையும் வாங்கி கொடுக்க வில்லை. பணமும் கொடுக்க வில்லை.

இதுகுறித்து கேட்டபோது ஜீவராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சுகந்தி, செந்தி ல்குமார், பிரபா ஆகியோர் அவரை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜிதா கே.கே.நகர் குற்றப்பி ரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா மோசடி செய்த ஜீவராஜ் ,சுகந்தி, செந்தில்குமார், பிரபா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News