உள்ளூர் செய்திகள்

திருச்சியில் வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2023-09-23 13:27 IST   |   Update On 2023-09-23 13:27:00 IST
  • கத்தி முனையில் பணத்தை பறித்து சென்றனர்.
  • வழக்குப்பதிவு செய்து செந்தில் முருகன், செந்தில் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தார்.

திருச்சி,  

திருச்சி எடமலைபட்டிபுதூர் அன்பிலார் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் எம்ஜிஆர் மன்றம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் இவரை வழிமறித்து கத்தி முனையில் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து எடமலைபட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து செந்தில் முருகன், செந்தில் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தார். அவர்களிடமிருந்து பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News