உள்ளூர் செய்திகள்

200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

Published On 2023-09-20 13:26 IST   |   Update On 2023-09-20 13:26:00 IST
  • திருச்சி ஹோட்டல்களில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
  • உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்

திருச்சி,

நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் கடந்த 16-ந் தேதி சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல்நல க்குறைவு ஏற்பட்டு இறந்தார்.இந்த சம்பவத்தை தொட ர்ந்து திருச்சியில் தில்லை நகர், சாஸ்திரி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் உள்ள சவர்மா கோழி க்கறி மற்றும் அசைவ உண வுகள் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாது காப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையி லான அதிகாரிகள் குழுவி னர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் கெட்டுப்போன 200 கிலோ அசைவ உணவுகள் பறி முதல் செய்யப்பட்டு, அழி க்கப்பட்டன.

இதில் 9 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் நோட்டீஸ் கொடுக்க ப்பட்டது. இதில் 6 கடை களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், ஜூஸ்போட அழுகிய பழங்கள் வைத்தி ருந்த ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்து 50 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு கூறுகையில், "சவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் கடைகள் அன்றைய தினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. சோதனையின்போது, அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தங்களது பகுதியில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள் விற்பனை 

Tags:    

Similar News