உள்ளூர் செய்திகள்

மின்வாரிய ஊழியர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2023-11-05 09:44 GMT   |   Update On 2023-11-05 09:44 GMT
  • மக்களுக்கு மின் விபத்து நேராமல் ஊழியர்கள் செயல்படவேண்டும்
  • அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

திருவாரூர்:

திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டத்தின் சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் கூறுகையில், பணியின் போது மின் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக பணியாளர்கள் எர்த்ராடு கண்டிப்பாக பணியின்போது பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தாத ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இயற்கை இடற்பாட்டால் மின் கம்பி கள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தை துண்டித்து பொதுமக்களுக்கு மின் விபத்து நேராமல் விரைந்து ஊழியர்கள் செயல்படவேண்டும். மழை நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க போதிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

முடிவில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில் பிரிவு பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News