உள்ளூர் செய்திகள்
- சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக பாரத சொற்பொழிவு நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை திரவுபதி அம்மனுக்கு பால் இளநீர் தேன் சந்தனம் மஞ்சள் போன்ற விசேஷ திரையவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அர்ஜுனர், திரவுபதி அம்மன் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
திருவிழாவில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.