உள்ளூர் செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகாயாகம்
- மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம்
- ஏரளாமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர் இஞ்சிமேடு, பெருந்தேவி தாயார் சமேத, வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது. காலையில் வரதராஜ, பெருமாள் பெருந்தேவி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர்.
பின்னர் யாகசாலையில் வண்ண அரிசி மூலம் 27 நட்சத்திர கோலம் வரைந்து ஸ்ரீரங்க சடகோப கைங்கர சபா பாலாஜி, வேங்கடநாதன், பட்டர்கள் தலைமையில் 11 பட்டர்கள் பல்வேறு மூலிகையின் மூலம் யாகம் வளர்க்கப்பட்டு சுவாதி நட்சத்திரம் மகாயாகம் நடந்தது.
இதில் சுற்றுப்புற நகரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.