search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nakshatra Mahayaga"

    • மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம்
    • ஏரளாமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர் இஞ்சிமேடு, பெருந்தேவி தாயார் சமேத, வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது. காலையில் வரதராஜ, பெருமாள் பெருந்தேவி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர்.

    பின்னர் யாகசாலையில் வண்ண அரிசி மூலம் 27 நட்சத்திர கோலம் வரைந்து ஸ்ரீரங்க சடகோப கைங்கர சபா பாலாஜி, வேங்கடநாதன், பட்டர்கள் தலைமையில் 11 பட்டர்கள் பல்வேறு மூலிகையின் மூலம் யாகம் வளர்க்கப்பட்டு சுவாதி நட்சத்திரம் மகாயாகம் நடந்தது.

    இதில் சுற்றுப்புற நகரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • பல்வேறு மூலிகையை கொண்டு நடத்தினர்
    • சமபந்தி விருந்து வழங்கப்பட்டது

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவி லில் சுவாதி நட்சத் திரம் மகாயாகம் நடந்தது. காலை யில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள். கல் யாண லட்சுமி நர சிம்மர், ராமர். லட்சுமணர், சீதா தேவி,சக்கரத்தாழ் வார், கருடாழ் வார், ஆண்டாள், நாச்சியார் ஆகிய மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து உற்சவர் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், பூதேவி தாயார், கல்யாண லட்சுமி நரசிம்மர் ஆகிய உற்சவர்களை யாக மண்டபத்தில் வைத்து ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகி பாலாஜி பட்டர், வேங்கடநாதன் பட்டர் உள்ளிட்ட 22 பட்டர்கள் பல்வேறு மூலிகையை கொண்டு சுவாதி நட்சத்திர யாகம் நடத்தினர். உலக நன்மைக்காகவும், திருமணம் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வியாபாரத்தில் லாபம் கிடைக்கவும், நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டியும் பக்தர்கள் வேண்டிக்கொண்டனர்.

    யாகத்தில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள்கயிறு அனைவருக் கும் வழங்கப்பட்டது. இதில் சென்னை, காஞ்சீபுரம், திண்டிவனம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி ஆகிய ஊர்களில் இருந்து வேன், கார் மூலமாக வந்து கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தி ருந்தனர்.

    ×