உள்ளூர் செய்திகள்

பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி

Published On 2023-05-04 13:18 IST   |   Update On 2023-05-04 13:18:00 IST
  • தபால் நிலையம் முன்பாக நடைபெற்றது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கீழ்பென்னாத்தூர்:

முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் வீ.பாரதிதாசன் ஆகியோருக்கு கீழ்பென்னாத்தூர் நகர, ஒன்றிய பா.ம.க சார்பில் தனித்தனியாக கவன ஈர்ப்பு கடிதங்கள் அனுப்பும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் தபால் நிலையம் முன்பாக நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் நகர பா.ம.க செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட அமைப்புச் செயலாளர் கே.ஆர்.முருகன், மாவட்ட வன்னியர் சங்க துணைத் தலைவர் கனகராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்திமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழ்பென்னாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News