உள்ளூர் செய்திகள்
தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வீட்டில் பதுக்கியவர் கைது
- புகையிலை, பைக் பறிமுதல்
- போலீசார் சோதனையில் சிக்கியது
திருவண்ணாமலை:
செங்கம் தாலுகா சென்னச முத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாகதிருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தர வின் பேரில் மாவட்ட குற்றத்தடுப்பு தனிப்படை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார்சென்னசமுத்திரம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்தப் பகு தியை சேர்ந்த ராஜன் ( வயது 37 ) என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு சுமார் ரூ.37 ஆயிரத்து 800 மதிப்பிலான தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தி ருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ராஜனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்தனர்.