உள்ளூர் செய்திகள்

திரவுபதியம்மன் கோவில் மகா பாரதம் அக்னி வசந்த விழா

Published On 2023-04-18 14:50 IST   |   Update On 2023-04-18 14:50:00 IST
  • பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
  • 22-ந்தேதி காலை துரியோதனன் படுகளம் நடக்கிறது

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் கடந்த மார்ச் 23-ந்தேதி தொடங்கி திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று 17-ந்தேதி கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட தபசு மரத்தில் அர்ச்சுனன் வேடமணிந்து நாடக நடிகர் உச்சியில் தபசு செய்து ஈசனிடம் பாசுபதாஸ்திரம் வேண்டினார்.

இந்த பாசுபதாஸ்திரம் மகாபாரத போரில் கர்ணனை வெல்ல அஸ்திரம் ஆகும். இந்த தபசு மரத்தை சுற்றிவந்து திருமணமான பெண்கள் குழந்தைகள் வேண்டியும், திருமணமாகாத பெண்கள் திருமணம் வேண்டியும் சுற்றி வந்து வணங்கினர்.

முடிவில் குறவன் குறத்தி வேடத்தில் ஈசன் வந்து அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கினார். வருகிற 22-ந்தேதி காலை துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி விழா நடக்கிறது.

மறுநாள் 23-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News