உள்ளூர் செய்திகள்
- தம்டகோடி மலையில் நடந்தது
- பக்தர்கள் சாமி தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிபாளையம் தம்டகோடி மலையில் சுப்பிரமணி யசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் 13-ம்தேதி கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
இதைமுன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிருத்திகை விரதமிருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
மேலும் இரவில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தங்கத் தேர் உற்சவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி ஆடி பாடி சென்றனர்.