உள்ளூர் செய்திகள்
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- யாகசாலையில் சிறப்பு பூைஜகள் நடந்தது
- ஏராளமானோர் சாமி தரிசனம்
ஆரணி:
ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை செல்லியம்மன் நன்னீராட்டு விழா கும்பாபிஷேக விழா ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
ஏற்கனவே அமைக்கபட்ட யாகசாலையில் கோபூஜை, கணபதி ஹோமம், மகாபூர்ண, பூஜை செய்து புனித கலசநீரை கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் கொண்டாடபட்டது.
பின்னர் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ். அன்பழகன், சுந்தர், மோகன், துரை மாமது ஆகியோர் பங்கேற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கபட்டடன.