உள்ளூர் செய்திகள்

அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்த காட்சி.

ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு

Published On 2023-05-20 12:53 IST   |   Update On 2023-05-20 12:53:00 IST
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
  • 15 நாட்களாக மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 15 நாட்களாக மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

இதில் நாடக கலைஞர்கள் அர்ஜுனன் வேடம் அணிந்து கொண்டு பாடல்களைப் பாடி உயரமான மரத்தில் ஏறி மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனர்.

இந்த அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News