உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரில் துணிகளை துவைக்கும் பெண்கள்

Published On 2023-03-29 11:07 IST   |   Update On 2023-03-29 11:07:00 IST
  • மேட்டுப்பாளையத்திலிருந்து ராட்சத குழாய் மூலம் அவினாசிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
  • குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.

அவினாசி :

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ராட்சத குழாய் மூலம் அவினாசிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அவினாசி புது பஸ் நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாகனங்களை கழுவுவது, பெண்கள் வீட்டில் இருந்து துணிகளை எடுத்து வந்து துவைப்பது போன்ற சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டது.

எனவே குழாய் உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News