உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வெள்ளகோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

Published On 2023-09-17 09:21 GMT   |   Update On 2023-09-17 09:21 GMT
  • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு உப்புபாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் பகுதிக்கு சென்றார்.
  • அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்திரம் உயிரிழந்தார்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள வேப்பம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் நவீன் (வயது 21) என்பவர் தனது தாய் சவுந்தரம் (45) என்பவரை தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு உப்புபாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

இதில் தாயும் மகனும் ரோட்டில் விழுந்தனர். தாய் சவுந்திரத்திற்கு தலையில் பலத்த அடிபட்டு விட்டது. உடனே அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்திரம் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News