உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

வீரபாண்டி, திருப்பூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-07-05 06:14 GMT   |   Update On 2022-07-05 06:14 GMT
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
  • உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருப்பூர்

திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் உள்ள முருகம்பாளையம் மின் பாதையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட கண்ணன் காட்டேஜ், பாறக்காடு 1 முதல் 6-வது வீதி வரை, ஆசாரி தோட்டம், கோடிஸ்வரா கார்னர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இதுபோல் திருப்பூர் பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்தில் செட்டிபாளையம் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், வெங்கடேசா நகர், செல்வலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

அதுபோல் திருப்பூர் திருநகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாைள காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஆலாங்காடு, வெங்கிடாசலபுரம், காதி காலனி, கதர் காலனி, கே.பி.ஆர்.தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம் எலிமெண்டரி பள்ளி முதல் மற்றும் 2-ம் வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முதசாமி கவுண்டர் வீதி, நடராஜ் தியேட்டர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News