உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தந்தையை தாக்கிய மகன் கைது

Published On 2023-08-14 13:28 IST   |   Update On 2023-08-14 13:28:00 IST
  • தனியே இருக்க வேண்டாம் மீண்டும் ஊருக்கு வந்து விடுமாறு சங்கர் கூறியதாக கூறப்படுகிறது.
  • ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து தந்தை லோகநாதன் தலையில் வெட்டிள்ளார்.

பல்லடம்:

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45) .இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் லோகநாதன் பல்லடத்தில் தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கிக் கொண்டு சென்டிரிங் கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் இவரை பார்ப்பதற்காக நேற்று அவரது மகன் சங்கர் (வயது21) வந்துள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது தனியே இருக்க வேண்டாம் மீண்டும் ஊருக்கு வந்து விடுமாறு சங்கர் கூறியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து தந்தை லோகநாதன் தலையில் வெட்டிள்ளார். இதில் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் சங்கரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News