உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடப்பட்டக் காட்சி. 

காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-08-28 04:33 GMT   |   Update On 2023-08-28 04:33 GMT
  • மரக்கன்றுகள் நடும் விழாவில் மொத்தம் 175 மரக்கன்றுகள் நடப்பட்டன.
  • காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 22 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

காங்கயம்:

காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 22 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக காங்கயம் ஸ்ரீவராஹி கேட்டேட் டவுன்சிப் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது துளிகள் அமைப்பு நிர்வாகிகள், ஸ்ரீவராஹி ரியலிட்டி குரூப் (எஸ்.வி.ஆர்.குரூப்) நிர்வாகிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

நிகழ்ச்சியில் 175 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஸ்ரீவராஹி கேட்டேட் டவுன்சிப் குடும்ப உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News