உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வடுகபட்டி பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-10-08 04:40 GMT   |   Update On 2023-10-08 04:40 GMT
  • வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • நாளை 9-ந்தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தாராபுரம்:

தாராபுரம் மின் வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 9ந் தேதி இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதனால் வடுகபட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான மூக்குத்தரிச்சான்பாளையம், குமாரபாளையம், சுள்ளப்பெரிக்கா பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, வடுகபட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டணம் அது சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News