உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

Published On 2022-11-26 08:24 GMT   |   Update On 2022-11-26 08:24 GMT
  • மூதாட்டி உடல்நிலை சரியின்றி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் அருகே உள்ள நாகமநாயக்கன்பட்டியை சேர்ந்த கந்தசாமி மனைவி சவுந்தரம் (வயது 75).இவர் உடல்நிலை சரியின்றி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சவுந்திரம் வெள்ளகோவில் அருகே உள்ள மோளகவுண்டன்வலசில் உள்ள மகன் சிவசாமி (47), வீட்டிற்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவசாமி திடீரென்று எழுந்து பார்த்த போது வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது. அத்துடன் தாய் சவுந்திரத்தை வீட்டில் காணவில்லை. இதனால் தாயாரை பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றின் அருகில் சிவசாமி வீட்டு போர்வை, சவுந்தரத்தின் செருப்பு கிடந்துள்ளது. உடனே கிணற்றுக்குள் பார்க்கும்போது சவுந்தரம் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து சவுந்தரத்தின் உடமலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News