உள்ளூர் செய்திகள்

திருப்பூர் வாலிபாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு வரலட்சுமி பூஜை நடைபெற்றது.அதில் பங்கேற்ற பெண்களை படத்தில் காணலாம்.

திருப்பூரில் வரலட்சுமி விரத வழிபாடு

Published On 2023-08-25 10:04 GMT   |   Update On 2023-08-25 10:04 GMT
  • லட்சுமி கடவுளின் அருளை பெறுவதற்கான வழிபாடாக வரலட்சுமி விரதம் உள்ளது.
  • பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் நீடிக்க, தைரியம், வெற்றி, குழந்தை பேறு போன்றவற்றை பெறவும் வரலட்சுமி விரதம் இருந்தனர்.

திருப்பூர்:

லட்சுமி கடவுளின் அருளை பெறுவதற்கான வழிபாடாக வரலட்சுமி விரதம் உள்ளது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பெளர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிகிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் நீடிக்க, தைரியம், வெற்றி, குழந்தை பேறு போன்றவற்றை பெறவும் வரலட்சுமி விரதம் இருந்தனர். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு வீடுகளில் வரலட்சுமி விரத வழிபாடு நடைபெற்றது. இதற்காக அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னி பெண்கள், சுமங்கலி பெண்களை விரத பூஜையில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தனர்.

நோன்பு பதார்த்தங்களாக பச்சை அரிசி இட்லி, பருப்பு சேர்த்த குழம்பு, ரசம், கறிவகைகள், வடை, சர்க்கரை பொங்கல், பாசிபருப்பு பாயாசம், தேங்காய், பச்சைமிளகாய் உப்பு சேர்த்த பச்சடி, கார கொழுக்கட்டை உள்ளிட்ட பதார்த்தங்களை தயாரித்து வழிபாட்டில் வைத்தனர்.

இதுதவிர லட்சுமி கடவுளுக்கு மிகவும் பிடித்த பதார்த்தமாக இருந்து வரும் கோசம்பரி தயார் செய்து படையலாக படைத்தனர். எளிமையான முறையில் வரலட்சுமி வழிபாடு செய்ய சிலர் ஐந்து வகையான பழங்கள், ஐந்து வகை மலர்கள் ஆகியவற்றை லட்சுமி கடவுள் முன் சமர்ப்பித்து, லட்சுமி தேவியின் துதிப்பாடலை பாடி வழிபட்டனர்.

இதேப்போல் திருப்பூரில் உள்ள கோவில்களிலும் வரலட்சுமி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News