உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உணவு கலப்படம் புகார்களை பதிவு செய்ய புதிய செயலி

Published On 2023-05-08 07:54 GMT   |   Update On 2023-05-08 07:54 GMT
  • உணவுப் பாதுகாப்புத்துறையினர் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளம் மற்றும் செயலி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
  • TN-FOOD SAFETY DEPARTMENT என்ற பெயரில் உள்ள இந்த செயலியை, பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

திருப்பூர்:

உணவுப் பாதுகாப்புத்துறையினர் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளம் மற்றும் செயலி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான குறை, புகார்களை உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பிரத்யேக செயலியை வடிவமைத்துள்ளது. TN-FOOD SAFETY DEPARTMENT என்ற பெயரில் உள்ள இந்த செயலியை, பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் உணவு கலப்படம் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, திருமணம் உள்ள விழா நாட்களில், மீதமாகும் உணவை தானம் செய்வது குறித்த தகவலை பதிவு செய்வதற்கான தளங்கள் உள்ளன.

Tags:    

Similar News