உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அவினாசியில் இளம்பெண் தற்கொலை

Published On 2022-09-29 05:53 GMT   |   Update On 2022-09-29 05:53 GMT
  • அவினாசி அருகே தெக்கலூரில் உள்ள ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார்.
  • நேற்று முன்தினம்இரவு சுவேதா செளத்ரி குழந்தையுடன் தூங்க சென்று விட்டார்.

அவினாசி:

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அமித் (வயது30) .இவர் அவினாசி அருகே தெக்கலூரில் உள்ள ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி சுவேதா செளத்ரி (26) மற்றும் 8 மாத பெண் குழந்தையும் உள்ளது. நேற்று முன்தினம்இரவு சுவேதா செளத்ரி குழந்தையுடன் தூங்க சென்று விட்டார். இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அமித் அறையை திறந்து பார்த்தபோது சுவேதா செளத்ரி மின்விசிறியில் தூக்கில் தொங்கிகொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சுவேதா சௌத்ரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News