உள்ளூர் செய்திகள்

மாநில செய்தி மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்த காட்சி.

வெள்ளக்கோவில் அருகே ரூ. 5.12 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிஅமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2023-06-20 08:10 GMT   |   Update On 2023-06-20 08:10 GMT
  • மேட்டுக்காட்டுவலசு முதல் வரட்டுக்கரை வரையிலும் ஊராட்சி சாலைகள் தரம் உயா்த்தப்பட உள்ளன.
  • காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

வெள்ளக்கோவில் :

வெள்ளக்கோவில் அருகே ரூ. 5.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மாநில செய்தி மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம் வள்ளியிரச்சல் ஊராட்சி வரட்டுக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்பூா் மாவட்ட கலெக்டர் .கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முருகேசன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் இளங்கோ, இளம்பூரணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெடுஞ்சாலைத் துறை, நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.12 கோடி மதிப்பீட்டில் ஓலப்பாளையம் முதல் மொட்டக்காடு வரையிலும், மேட்டுக்காட்டுவலசு முதல் வரட்டுக்கரை வரையிலும் ஊராட்சி சாலைகள் தரம் உயா்த்தப்பட உள்ளன.

இப்பணிகளைத் தரமான முறையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சா் அறிவுறுத்தினாா். நிகழ்ச்சியில் துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News