உள்ளூர் செய்திகள்

 தார் சாலை பணிகளை மேயர் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை தரம் குறித்து மேயர் ஆய்வு

Published On 2023-04-21 10:11 GMT   |   Update On 2023-04-21 10:11 GMT
  • சேதமடைந்த சாலையை சரி செய்து தரும்படி மேயரிடம் இஸ்லாமிய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
  • சாலை அமைக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

திருப்பூர் :

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு சி.டி.சி கார்னர் கபஸ்தான் சாலையில் மக்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளதால் சேதமடைந்த அந்த சாலையை சரி செய்து தரும்படி மேயர் தினேஷ்குமாரிடம் இஸ்லாமிய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை அமைக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். அதன்படி அங்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டு அதனை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு மேயர் அர்ப்பணித்தார்.மேலும் முடிவுற்ற தார் சாலை பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தி.மு.க. பகுதி செயலாளர் உசேன், வட்ட கழக செயலாளர்கள் ரபீக், முகமது அலி, பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News