உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

Published On 2023-03-12 13:15 IST   |   Update On 2023-03-12 13:15:00 IST
  • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டில் விழுந்தார்.
  • விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டுள்ளனர்.

பல்லடம் :

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள மொண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் குமார்(47), இவர் தவில் வாத்திய வித்வானாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் 7-ம் தேதியன்று பல்லடம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, மீண்டும் வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் தண்டபாணி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழ ந்தார். இதையடுத்து இந்த விபத்து குறித்து அவரின் மனைவி புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டுள்ளனர்.

Tags:    

Similar News