உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பல்லடம் அருகே விபத்தில் பனியன் தொழிலாளி பலி

Published On 2022-11-24 11:27 IST   |   Update On 2022-11-24 12:11:00 IST
  • பலத்த காயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  • அன்பழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   பல்லடம்

தாராபுரம் தும்பலபட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அன்பழகன் (வயது 22). பனியன் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு பல்லடம் - தாராபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகிலாண்டபுரம் என்ற இடத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலை ஓர பள்ளத்தில் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காமநாயக்கன்பாளையம் போலீசார் அன்பழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்

Tags:    

Similar News