உள்ளூர் செய்திகள்

கோப்பபுடம்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் 3-ந் தேதி உண்ணாவிரதம்

Published On 2023-04-01 09:26 GMT   |   Update On 2023-04-01 09:26 GMT
  • புதியதாக 2 ஆயிரத்து 715 சுகாதார ஆய்வாளர்கள் பதவிகளை உருவாக்க வேண்டும்.
  • அரசாணை எண் 337ஐ உடனே ரத்து செய்ய வேண்டும்.

வெள்ளகோவில் :

திருப்பூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் சங்க பொறுப்பாளர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு முதல் நிலை சுகாதார ஆய்வாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,புதியதாக 2 ஆயிரத்து 715 சுகாதார ஆய்வாளர்கள் பதவிகளை உருவாக்க வேண்டும், சுகாதார ஆய்வாளர்களுக்கு எதிரான அரசாணை எண் 337ஐ உடனே ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் 3-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News