உள்ளூர் செய்திகள்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசிய காட்சி.

இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்- பொதுக்கூட்டம்

Published On 2023-09-24 11:48 GMT   |   Update On 2023-09-24 11:48 GMT
  • இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை.

பல்லடம், செப்.24-

பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கடைவீதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில்:-

விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவது என்பது வழிபாட்டு உரிமையுடன் தொடா்புடையதாகும். விநாயகா் சதுா்த்தி தினத்தை புராண நம்பிக்கைகளின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கத்தல்ல என்பதால் வாழ்த்து தெரிவிக்க மாட்டோம் என்று தற்போதைய அரசு தெரிவித்துள்ளது. பல இடங்களில் புதிதாக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கவில்லை. மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை. இந்தத் திட்டத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி பிரபு, மாநில இளைஞர் அணி தலைவர் ஹோம் கார்டு பாலாஜி, கோவை மாவட்ட தலைவர் திருமுருகனார், மாநில இளைஞரணி துணைத் தலைவர் பிர்லா போஸ், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், நகரத் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவிநாசி பாளையம் அருகே உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News