உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வுக்கு இலவச பயிற்சி

Published On 2022-09-21 07:02 GMT   |   Update On 2022-09-21 07:02 GMT
  • பிளஸ் 1 மாணவர்களும் எழுதத்தகுதி பெற்றுள்ளனர்.
  • பிளஸ் 2 வகுப்பு முடிக்கும் வரை மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும்.

குடிமங்கலம் :

பள்ளிக்கல்வித்துறை, தமிழ் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வை நடத்த உள்ளது.

இந்தத்தேர்வை பிளஸ் 1 மாணவர்களும் எழுதத்தகுதி பெற்றுள்ளனர். அவ்வகையில் இந்தத்தேர்வில் வெற்றி பெறும் அரசு, தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 1,500 பேருக்கு பிளஸ் 2 வகுப்பு முடிக்கும் வரை மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும்.இதற்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் மாதம் நடக்கவுள்ள நிலையில் உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையம் சார்பில் ராமமூர்த்தி மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறார்.இதற்கான ஏற்பாடுகளை, பள்ளித்தலைமையாசிரியர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News