உள்ளூர் செய்திகள்

கைதான போலி டாக்டர் அண்ணாதுரை. 

திருப்பூரில் கைதான போலி டாக்டர் சிறையில் அடைப்பு

Published On 2023-04-19 15:33 IST   |   Update On 2023-04-19 15:33:00 IST
  • கரட்டாங்காட்டில் இயங்கி வந்த விஸ்வந்த் கிளினீக் குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
  • மருத்துவத் துறையினர் கடந்ந 13ந் தேதி, 'சீல்' வைத்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் கரட்டாங்கா ட்டில் இயங்கி வந்த விஸ்வந்த் கிளினீக் குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. இதனால் கிளினீக்கில் ஆய்வு நடத்திய மருத்துவத் துறையினர் கடந்ந 13ந் தேதி, 'சீல்' வைத்தனர்.

கிளினீக் நடத்தி வந்த அண்ணாதுரை, டில்லியில் சித்த மருத்துவ படிப்பு முடித்ததாக தெரிவித்தார். அதற்கான சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலி என்பது தெரிந்தது. மேலும் மருத்துவ படிப்பு முடிக்காமல், நோயா ளிகளுக்கு மருத்துவம் பார்த்து, மருந்து, மாத்திரை எழுதிக் கொடுத்து, ஊசி செலுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்படி தெற்கு போலீசில் அண்ணாதுரை மீது புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News