உள்ளூர் செய்திகள்
- நடராஜன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவினாசி
அவினாசியை அடுத்துள்ள நடுவச்சேரியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 68). இவர் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். பல வருடங்களாக மனைவியை பிரிந்து தனித்து வாழ்ந்துவந்தார். இந்த நிலையில் இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.