உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காங்கயம் அருகே மரத்தின் மீது காா் மோதி டிரைவர் பலி

Published On 2022-09-03 10:54 GMT   |   Update On 2022-09-03 10:54 GMT
  • காா் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
  • தீயணைப்புத் துறையினா் முருகானந்தத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

காங்கயம் :

திருப்பூா் வீரபாண்டி, சபாபதி நகரை சோ்ந்தவா் முருகானந்தம் (வயது 66). இவா் திருப்பூா் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு நிறுவனத்தில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் கரூருக்கு காரில் சென்றுள்ளாா். காங்கயம் தாலுகா, சிவன்மலை அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில் செல்லும்போது, காா் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் முருகானந்தம் காருக்குள் சிக்கிக் கொண்டாா்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் தீயணைப்புத் துறையினா் முருகானந்தத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News