உள்ளூர் செய்திகள்

மேயர் தினேஷ்குமார்.

மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டத்தில் தி.மு.க.வினர் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் - மேயர் அழைப்பு

Published On 2023-06-10 12:04 GMT   |   Update On 2023-06-10 12:04 GMT
  • காலை 6 மணி முதல் 9 மணி வரை குமரன் கல்லூரி அருகில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.
  • திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் வடக்கு மாநகர் தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகராட்சியின் 2023-2024 வரவு செலவு கூட்டத்தில் அறிவித்தபடி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை மங்களம் சாலை,எஸ்.ஆர்.நகர், குமரன் கல்லூரி அருகில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை கலாச்சாரங்களை பாதுகாக்கவும், பொது மக்கள் இளைப்பாறும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய சிறப்பான பொழுது போக்கு திருநாளாக மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.

இதில் தி.மு.க. மாநில,மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள்,தொ.மு.ச.நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News