உள்ளூர் செய்திகள்

தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனுக்கு டாஸ்மாக் தொ.மு.ச. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்த காட்சி.

தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனுக்கு டாஸ்மாக் தொ.மு.ச. நிர்வாகிகள் வாழ்த்து

Published On 2022-10-05 08:59 GMT   |   Update On 2022-10-05 08:59 GMT
  • தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
  • பத்மநாபனை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் :

தமிழகம் முழுவதும் தி.மு.க. மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரும், ஏற்கனவே திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்த இல.பத்மநாபன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில், மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபனை நேரில் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் டாஸ்மாக் தொ.மு.ச. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News