உள்ளூர் செய்திகள்

மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற காட்சி. 

மத்திய அரசின் திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேச்சு

Published On 2022-10-11 07:53 GMT   |   Update On 2022-10-11 07:53 GMT
  • மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
  • மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

இதில் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களில் வருவாய்த்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க செய்ய வேண்டும். நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என பேசினார்.

Tags:    

Similar News