உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட்க் காட்சி.

மங்கலம் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

Published On 2023-08-26 11:09 IST   |   Update On 2023-08-26 11:09:00 IST
  • தி.மு.க. நிர்வாகிகள்,பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  • மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தபட்டது.

மங்கலம்:

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்புத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அக்ரஹாரப்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எம்.செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளிக்குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதி அப்துல்பாரி, திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத், மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினர் முகமது இத்ரீஸ், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான ரபிதீன், ஜன்னத்துல்பிரதௌஸ், அர்ஜூனன், மசூதாபேகம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள்,பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News