உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் தரமற்ற சாலை -ஒப்பந்ததாரர் மீது புகார்
- கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 84 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு போடப்பட்டது.
- கைகளில் எடுத்தாலே தார்ச்சாலை பெயர்ந்து வரும் அளவுக்கு சாலை போடப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி 13 வது வார்டு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை மற்றும் சாய் ராஜ் ஆகியோர் கூறுகையில்:-
பல்லடம் நகராட்சி 13வது வார்டு பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 84 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு போடப்பட்டது. இந்த நிலையில், தார் சாலை தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளது.
மேலும் பழைய தார் சாலையை முறையாக அகற்றாமல் போடப்பட்டுள்ளதால், தார் சாலை பாலம்,பாலமாக பெயர்ந்து வருகிறது. கைகளில் எடுத்தாலே தார்ச்சாலை பெயர்ந்து வரும் அளவுக்கு சாலை போடப்பட்டுள்ளது. எனவே தரமற்ற தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.