உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அரசு கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

Published On 2023-07-17 08:51 GMT   |   Update On 2023-07-17 08:51 GMT
  • தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
  • நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது

திருப்பூர்:

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வருகிற 23-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 28ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உரிய நேரத்திற்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு 0422-2590080,94869-77757 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

Similar News