உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மாடு.

உடுமலையில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள்

Published On 2023-09-22 10:29 GMT   |   Update On 2023-09-22 10:38 GMT
  • பொதுமக்கள் துர்நாற்றத்தில் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
  • கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடுமலை:

உடுமலை அன்னபூரணி லேஅவுட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் துர்நாற்றத்தில் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

குவிக்கப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மேலும் இந்த பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகள் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் அவல நிலை உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News