உள்ளூர் செய்திகள்

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற காட்சி. 

பொதுமக்களின் அடிப்படைத்தேவைகளை உடனடியாக நிறைவேற்றி கொடுக்க நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

Published On 2022-08-14 11:06 GMT   |   Update On 2022-08-14 11:06 GMT
  • முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
  • பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிா்வாகத் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப்பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை வகித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:-

முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் அபிவிருத்தித் திட்டம், ஒருங்கிணைந்த மேலண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிய குடிநீா்த் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தினசரி மற்றும் வாரசந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகள் 17 பேருக்கு தொழில் தொடங்க ரூ.24 லட்சம் மதிப்பிலானவங்கிக் கடனுதவி, ஒரு குரல் புரட்சி திட்டத்தின்கீழ் பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் (நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்) சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், நகராட்சி நிா்வாக இயக்குநா் பி.பொன்னையா, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News