உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

வெள்ளகோவிலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-08-14 10:41 GMT   |   Update On 2022-08-14 10:41 GMT
  • கணவன, மனைவி இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • கணவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் வி.பி.எம்.எஸ். நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார பாலசுதர்சன் ( வயது 45) . இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (34) . குமார பாலசுதர்சன் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் நூல் மில்லில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

நேற்று வழக்கு போல் குமார பாலசுதர்சன் வேலைக்கு சென்று விட்டார்,இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று சாமுண்டீஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோதுவிட்டத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்த கணவர் சாமுண்டீஸ்வரி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடமலை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News