உள்ளூர் செய்திகள்
தாராபுரம் அருகே தனியார் பஸ் மீது லாரி மோதி 20 பேர் படுகாயம்
- பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
- செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பஸ் கணியூர் அடுத்த சோழமாதேவி அருகே சென்று கொண்டிருந்து. அப்போது செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் பஸ்ஸில் இருந்த பயணிகளும் லாரியின் முன்புறம் இருந்த தொழிலாளர்கள் என 20 பேர் இடிப்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்கள் மீட்டு கோவை மற்றும் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.